ஞாயிறு, 17 ஜூலை, 2016

‪#‎ரஜினிக்கு_ஜால்ராப்போடும்_நீதிமன்றம்‬
‪#‎தமிழர்களை_வேட்டையாடும்_கபாலி‬
ரஜினி படத்தை வெளியிட வாய்ப்புள்ள 225இணையதளங்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணக்காரன்,அரசியல்வாதி,பார்ப்பான்,
மாபியாக்கும்பல்,கிரிமினல்கள் பணமெறிந்தால் தீயாக வேலை செய்யும் நீதிமன்றம் தொழிலாளர்,ஏழைகள் பிரச்சனை என்றால் 10வருடமாக வழக்கை இழுத்தடிக்கும்.
ஒரு வியாபாரி நட்டமடையக்கூடாது என்பதற்காக விரைந்து முடிவெடுக்கும் நீதிமன்றம், அதே ரஜினி படத்துக்கு அரசு, காவல்துறை உதவியுடன் 70ரூ,100ரூ டிக்கெட்டை 500க்கும் 1000க்கும் விற்பனை செய்து கொள்ளையடிப்பதைப் பற்றி கேள்வி எழுப்பாததேன்?
உணவிலே கலப்படத்துக்கு புகார் செய்யும் போது,அணுஉலைக்கெதிராக புகார் செய்யும் போது, பழங்குடியினரை விரட்டி நிலத்தை பிடுங்குவதற்கெதிராக
புகார் தரும்போது காதில் பஞ்சை வைத்தபடி நடிக்கும் நீதிமன்றம்தான்
காரியக்கிறுக்கனும் இந்துத்தவா வாதியுமான ரஜினி புகாருக்கு புயலாகக வேலை செய்கிறது.
திரையரங்கில் அரசின் அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு விற்பனை செய்யாத கபாலி படத்தை திருட்டுசிடி, இணையத்தில்தான் பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அரசின் அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு விற்காத கபாலிபடத்தின் கொள்ளையை கண்டிக்காத நீதிமன்றம் இணையத்தில் வெளியிடுவதை மட்டும் தடுக்கும் அதன் வர்க்கப்பாசத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
இது ஒருபுறமென்றால் ரஜினிக்காக மார்க்கெட் செய்யும் ஊடகவிபச்சாரம் அதைவிட சகிக்க முடியாததாயிருக்கிறது
ரஜினி எப்போது வருவார், கபாலி எப்போது ரிலீஸ், உடல்நிலை சரியில்லையா? மகள் ரஜினியுடன் இருக்கிறாரா? படத்தின் கதையென்ன?
அதற்கொரு தலித் ஒளிவட்டம், பாட்டு உருவான விதம், என ஊடகங்கள் ரஜினியின் கக்கூஸ்வரை போய் கண்டறிந்து வெளியிடும் புலனாய்வு திறன் இருக்கிறதே
த்தூ பல்லிளிக்கும் ஊடகவிபச்சாரம்
அரசபயங்கரவாதம் காஷ்மீரையோ, காந்தமாலையோ, ஆதிவாசிகளை வேட்டையாடுவதையோ இப்படி செய்தியாகத் தராத ஊடகம் கபாலிக்கு காவடி தூக்குகிறது.
நீதிமன்றமும் தனதுபங்குக்கு ஜால்ரா அடிக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு